காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரின் மிகப்பெரிய பிரச்சனை போக்குவரத்து. ஆனால் காஷ்மீர் நிர்வாகத்தின் போக்குவரத்து மேலாண்மை என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இதுகுறித்து உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில்,
அழகான மேம்பாலத் தூண்களுக்கு ஓவியம் தீட்டுவதால் சாலைகளில் குழப்பம் தீர்ந்துவிடாது, ஸ்ரீநகரில் போக்குவரத்து மேலாண்மை தனக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. நகரத்தின் மிகப்பெரிய பிரச்னைகளைத் தீர்க்க புதிய உள்கட்டமைப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய நாட்களில் ஸ்ரீநகர் நகரின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாகப் போக்குவரத்து மேலாண்மை உள்ளது. மேலும், ராம்பாக் மேம்பாலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு தேவையான எந்த நடவடிக்கையும், புதிய உள்கட்டமைப்புக்கும் முதலீடு செய்யப்படுவதையும் நான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்